பொங்கல் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை, அறந்தாங்கி வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
கன்னியாகுமரி
பொங்கல் பண்டிகையையொட்டி தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தாம்பரம்-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் புதுக்கோட்டை வழியாகவும், ராமநாதபுரம்-தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் அறந்தாங்கி வழியாகவும் இயக்கப்பட உள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து வருகிற 13-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06093) புறப்பட்டு மறுநாள் 12.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
இந்த ரெயில் புதுக்கோட்டைக்கு 14-ந் தேதி காலை 6.15 மணிக்கு வந்து 6.17 மணிக்கு புறப்படும். இதேபோல் மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து வருகிற 14-ந் தேதி மதியம் 3.30 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06094) புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் அதிகாலை 6.15 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் புதுக்கோட்டைக்கு 14-ந் தேதி இரவு 9.58 மணிக்கு வந்து இரவு 10 மணிக்கு புறப்படும்.
தாம்பரம்
இதேபோல் ராமநாதபுரத்தில் இருந்து சிறப்பு ரெயில் (வண்டி எண் 06104) வருகிற 10, 12, 17-ந் தேதிகளில் மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் அறந்தாங்கி ரெயில் நிலையத்திற்கு அன்றைய தினங்களில் மாலை 6.15 மணிக்கு வந்து மாலை 6.16 மணிக்கு புறப்படும். இதேபோல் தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரெயில் (வண்டி எண் 06103) வருகிற 11, 13, 18 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு சென்றடையும்.
இந்த ரெயில் அறந்தாங்கி ரெயில் நிலையத்திற்கு அன்றைய தினங்களில் நள்ளிரவு 1.29 மணிக்கு வந்து நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்படும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.