புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்தில் மருத்துவ முகாம் விழிப்புணர்வு பேரணியினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய திரு.செழியன் அவர்களின் தலைமையில் தொடங்கியது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் மற்றும் மணமேல்குடி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ முகாம் விழிப்புணர்வு பேரணியானது வருகின்ற வெள்ளிக்கிழமை 31/1/2025 அன்று நடைபெற இருப்பதினால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் 0 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொள்ளலாம் என்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தேவையான உதவி உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்காக மருத்துவர்கள் ஆலோசனை பேரில் அடையாள அட்டை பெற்று தரப்படும் என்றும், அதேபோல் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு நல திட்டங்களை கொண்டு சேர்ப்பதற்காகவும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குழு வருகை தர இருப்பதினால் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அன்போடு அழைக்கின்றோம் .
மணமேல்குடி தொடக்கப்பள்ளி மாணவர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டு வாசகங்களை உச்சரித்து கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு சசிகுமார் திரு பன்னீர்செல்வன் என் வரை மருத்துவர் திரு செல்வகுமார் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் திருமதி மணிமேகலை திரு கோவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.