புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுப்போன 140 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
செல்போன்கள் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுப்போன மற்றும் தொலைந்து போன செல்போன்கள் தொடர்பாக பொதுமக்கள் பலர் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக மாவட்டத்தில் அந்தந்த போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா சைபர் கிரைம் போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் திருட்டுப்போன மற்றும் தொலைந்து போன செல்போன்களை தொழில்நுட்ப முறையில் கண்டறிந்து அதனை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
உரியவர்களிடம் ஒப்படைப்பு
இதில் கடந்த 2 மாதங்களில் 140 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.21 லட்சம் இருக்கும். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உரியவர்களிடம் செல்போன்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் வழங்கினார். அப்போது சைபர் கிரைம் போலீசார் உடன் இருந்தனர்.
மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 894 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரம் ஆகும் என போலீசார் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.