முத்துக்குடா சுற்றுலா தல பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. பொதுமக்கள் வந்து செல்ல தார்சாலை அமைக்கப்பட உள்ளது.
சுற்றுலா தல பணிகள்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே முத்துக்குடா கடற்கரை பகுதியில் ரூ.3 கோடியில் சுற்றுலா தலம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலில் அலையாத்தி காடுகளை சுற்றுலா பயணிகள் படகில் சென்று ரசிக்கும் வகையில் படகு குழாமும் அமைக்கப்படுகிறது.
தற்போது கரையில் சுற்றுலா தலத்திற்கு பார்வையாளர்கள் மாடம், பயணிகள் தங்குவதற்கான அடிப்படை வசதிகள், அறைகள், உணவகம் உள்ளிட்ட வசதி ஏற்படுத்தப்படுகிறது. மேலும் பொழுதுபோக்கு அம்சமாக பூங்கா போன்றும், நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும் அமைக்கப்படுகிறது. இதில் கட்டுமான பணிகள் பெருமளவு முடிந்து திறப்பு விழாவுக்காக இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.
படகு குழாம்
இதேபோல படகுகுழாமில் படகுகள் நிறுத்துவதற்கான தளமும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முத்துக்குடா சுற்றுலா தலத்திற்கு பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து முத்துக்குடா சுற்றுலா தலம் வரை தார்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
தார்சாலை அமைத்தால் வாகனங்களில் வந்து செல்ல வசதியாக இருக்கும்.மேலும் சுற்றுலா தலம் திறப்பு விழா நடத்திய பின் படகுகுழாம் திறப்பு விழா மற்றொரு நாளில் நடத்த திட்டமிட்டு அதற்கேற்ப பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.