முத்துக்குடா சுற்றுலா தல பணிகள் மும்முரம் பொதுமக்கள் வந்து செல்ல தார்சாலை அமைக்கப்படுகிறது




முத்துக்குடா சுற்றுலா தல பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. பொதுமக்கள் வந்து செல்ல தார்சாலை அமைக்கப்பட உள்ளது.

சுற்றுலா தல பணிகள்

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே முத்துக்குடா கடற்கரை பகுதியில் ரூ.3 கோடியில் சுற்றுலா தலம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலில் அலையாத்தி காடுகளை சுற்றுலா பயணிகள் படகில் சென்று ரசிக்கும் வகையில் படகு குழாமும் அமைக்கப்படுகிறது.

தற்போது கரையில் சுற்றுலா தலத்திற்கு பார்வையாளர்கள் மாடம், பயணிகள் தங்குவதற்கான அடிப்படை வசதிகள், அறைகள், உணவகம் உள்ளிட்ட வசதி ஏற்படுத்தப்படுகிறது. மேலும் பொழுதுபோக்கு அம்சமாக பூங்கா போன்றும், நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும் அமைக்கப்படுகிறது. இதில் கட்டுமான பணிகள் பெருமளவு முடிந்து திறப்பு விழாவுக்காக இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.

படகு குழாம்

இதேபோல படகுகுழாமில் படகுகள் நிறுத்துவதற்கான தளமும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முத்துக்குடா சுற்றுலா தலத்திற்கு பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து முத்துக்குடா சுற்றுலா தலம் வரை தார்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

தார்சாலை அமைத்தால் வாகனங்களில் வந்து செல்ல வசதியாக இருக்கும்.மேலும் சுற்றுலா தலம் திறப்பு விழா நடத்திய பின் படகுகுழாம் திறப்பு விழா மற்றொரு நாளில் நடத்த திட்டமிட்டு அதற்கேற்ப பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments