அரசு ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க 13-ந் தேதி கடைசி நாள்




அரசு ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க 13-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

மாணவர் சேர்க்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, விராலிமலை மற்றும் கீரனூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) சேர்ந்திட www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் மேற்காணும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் வகுப்பு ஆகஸ்டு முதல் தொடங்கும். தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. விண்ணப்ப கட்டணம் ரூ.50-ஐ கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்க், ஜி பே வாயிலாக செலுத்தலாம்.

13-ந் தேதி கடைசி நாள்

மேலும் பயிற்சியில் சேரும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ் பாஸ், வரைபடக்கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும்.

அரசு பள்ளியில் பயின்ற பெண் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழும், அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழும் மாதந்தோறும் தலா ரூ.1,000 வழங்கப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வருகிற 13-ந் தேதி கடைசி நாளாகும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments