மாணவர் சேர்க்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, விராலிமலை மற்றும் கீரனூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) சேர்ந்திட www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் மேற்காணும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் வகுப்பு ஆகஸ்டு முதல் தொடங்கும். தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. விண்ணப்ப கட்டணம் ரூ.50-ஐ கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்க், ஜி பே வாயிலாக செலுத்தலாம்.
13-ந் தேதி கடைசி நாள்
மேலும் பயிற்சியில் சேரும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ் பாஸ், வரைபடக்கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும்.
அரசு பள்ளியில் பயின்ற பெண் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழும், அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழும் மாதந்தோறும் தலா ரூ.1,000 வழங்கப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வருகிற 13-ந் தேதி கடைசி நாளாகும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.