ஆவுடையார்கோவிலில் பணத்தை கொள்ளையடித்து விட்டு பெயிண்ட் கடைக்கு தீ வைப்பு மர்மநபர்களை கைது செய்யக்கோரி கிராமமக்கள் மறியல்




தேவகோட்டையை சேர்ந்தவர் சின்னையா மகன் மாரியப்பன் (வயது 48). இவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில், கரூர்-தேவகோட்டை சாலையில் கம்பி, பெயிண்ட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இந்நிலையில்கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகர் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்து எரிந்து நாசமானது. இதற்கிடைேய கடையில் உள்ள ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டு கடையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உள்ளனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிட பொருட்கள் எரிந்து சாம்பலாகியது. இதையடுத்து கடைக்கு தீ வைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை கைது செய்யக்கோரி வர்த்தக சங்கத்தினர், கிராமமக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு, ஆவுடையார்கோவில் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட கடை உரிமையாளருக்கு உரிய நிவாரணம் கிடைக்கப்பெற்று தர உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மறியலில் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments