தேவகோட்டையை சேர்ந்தவர் சின்னையா மகன் மாரியப்பன் (வயது 48). இவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில், கரூர்-தேவகோட்டை சாலையில் கம்பி, பெயிண்ட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இந்நிலையில்கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகர் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்து எரிந்து நாசமானது. இதற்கிடைேய கடையில் உள்ள ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டு கடையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உள்ளனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிட பொருட்கள் எரிந்து சாம்பலாகியது. இதையடுத்து கடைக்கு தீ வைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை கைது செய்யக்கோரி வர்த்தக சங்கத்தினர், கிராமமக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு, ஆவுடையார்கோவில் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட கடை உரிமையாளருக்கு உரிய நிவாரணம் கிடைக்கப்பெற்று தர உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மறியலில் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.