பலத்த காற்று எதிரொலியாக புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
மீன்பிடி தடைக்காலம்
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டன. அந்த வகையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில் 380 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன. மேலும் 15 ஆயிரம் மீனவர்கள் வீடுகளில் முடங்கினர். மீன்பிடி தடைக்காலத்தில் படகுகளை பராமரித்தல் பணியில் ஈடுபட்டு தயாராக வைத்தனர். இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
மீன்பிடிக்க செல்ல தடை
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு இன்று (திங்கட்கிழமை) செல்ல இருந்தனர். இதற்காக படகுகளை தயாராக வைத்ததோடு, மீனவர்களும் தயாராக இருந்தனர். இந்த நிலையில் தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும், மன்னார்வளைகுடா பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டது.
இதையொட்டி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பானது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என தெரிவித்தனர். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதேபோல விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை. மறு உத்தரவு வந்த பின் கடலுக்கு செல்ல மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ராமேசுவரம்
இதேபோல் தடைக்காலம் முடிந்து ராமேசுவரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் பிடிக்க செல்ல விசைப்படகு மீனவர்கள் படகுகளில் மீன்பிடி வலை உள்ளிட்ட சாதனங்களை ஏற்றி தயார் நிலையில் வைத்திருந்தனர்.பின்னர் பலத்த சூறாவளி காற்றால் மீன் பிடிக்க அதிகாரிகள் மீண்டும் தடை விதித்ததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 2000-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தொண்டி
தொண்டி பகுதியைச் சேர்ந்த சோளியக்குடி, சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நகர் லாஞ்சியடி, மற்றும் தொண்டி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் இருந்து 78 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தயார் நிலையில் உள்ளன. சூறாவளி காற்று குறையும், மீன்பிடிக்க செல்லலாம் என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.