அம்மாபட்டினம் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார். இதையடுத்து, மின்வாரியத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்சாரம் பாய்ந்து பலி
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள அம்மாபட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகு ஜகுபர் அலி. இவரது மகன் பிஸ்மிகான் (வயது 23). இவர் கடந்த 20-ந் தேதி இரவு 9 மணியளவில் அம்மாபட்டினம் கடை தெருவுக்கு சென்றபோது பிஸ்மிகான் மீது மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிஸ்மிகான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சாலை மறியல்
இந்தநிலையில் பிஸ்மிகான் மரணத்துக்கு மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் என்று கூறி அம்மாபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பிஸ்மிகான் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மின்வாரியத்தை கண்டித்தும், மணமேல்குடி அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் டாக்டர் இல்லாததை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த மணமேல்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.