புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவர்களுக்கான சிறப்பு திட்டங்களில் நிதியுதவி பெற விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஜுலை) 31-ந் தேதி கடைசி நாளாகும்.
சிறப்பு திட்டங்கள்
தமிழகத்தில் பாக் விரிகுடா கடற்பகுதியிலுள்ள கடற்கரை மாவட்டத்தில் மீனவர்கள் பயனடையும் வகையிலும் அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட ஏதுவாக சிறப்பு திட்டம் அறிவிப்பு செய்யப்பட்டு, மொத்தம் ரூ.216.73 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் பல்வேறு திட்டங்கள் குறித்த பயிற்சி மற்றும் சுயதொழில் தொடங்கிட நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப அறிவுரைகள் வழங்கப்படவுள்ளது.கடற்பாசி வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டு பொருள் தயாரித்தல், கடலில் கூண்டு அமைத்து மீன் வளர்த்தல், களி நண்டுகள் கொழுக்க செய்தல், மீன் பதப்படுத்துதல், நண்டு வேகவைத்தல், சுகாதார முறையில் மீன்களை கையாளுதல், நவீன மீன் விற்பனை அங்காடி அமைத்தல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
விண்ணப்பம்
இதேபோல் மதிப்புக்கூட்ட பொருட்கள் விற்பனை செய்தல், இணையதள வியாபாரம், உண்ண தயார் நிலையில் உள்ள மீன் உணவு பொருட்கள் தயாரித்தல், வலை பின்னுதல், படகு பழுது பார்த்தல், படகு கட்டுதல், காளான் வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு, கைவினைப்பொருட்கள் தயாரித்தல், மீன்வளம் சாராத வாழ்வாதார தொழிலான அழகு நிபுணர் கலை, செல்போன் சரிசெய்தல், செல்பேன் செயலிகளை பயன்படுத்துதல் ஆகிய திட்டங்களின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், மீனவ மகளிர், மீனவ இளைஞர்கள், மீன்பிடி சார்ந்த தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
கடைசி நாள்
விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஜுலை) 31-ந் தேதி கடைசி நாளாகும். அதற்குள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் அல்லது தபாலில் அனுப்பி வைக்குமாறு மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.