GPM மக்கள் மேடை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்



GPM மக்கள் மேடை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மக்கள் மேடை உறுப்பினர்கள் அனைவருக்கும் தியாகத்திருநாள் வாழ்த்துக்கள். 

மக்கள் மேடையின் ஆலோசனை கூட்டம் இன்று 07-06-2025 கடற்கரைப் பள்ளிவாசலில் நடைபெற்றது. மக்கள் மேடை தலைவர் பாவா மரைக்காயர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மக்கள் மேடை உறுப்பினர் கத்தார் சித்திக் அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார்கள்.


இந்த ஆலோசனை கூட்டத்தில்  24 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

ஆலோசனை கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

  1. பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையில் ஆண்டு சந்தாவை குறைத்து ரூ.3000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
  2. புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு அனைத்து உறுப்பினர்களும் முயற்சி செய்ய வேண்டும் என்றும், ஆண்டு சந்தாவை துரிதமாக செலுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  3. நமது வாட்டர் பிளான்ட் இருக்கும் இடத்தில் அவசர சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டுவது சம்பந்தமாக ஆலோசனை நடைபெற்றது அதன் அடிப்படையில் கட்டிடத்திற்கான நிதியை பங்குகள் மூலம் மக்கள் மேடை உறுப்பினர்களிடம் மட்டுமே பெறுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  4. மருத்துவமனை சம்பந்தமாக விரைவில் மக்கள் மேடை குழுமத்தில் கலந்தாய்வு நடைபெறும்.
  5. மருத்துவமனையைத் தொடர்ந்து இறகு பந்து விளையாட்டுக்கான உள் விளையாட்டரங்கம் கட்டுமானம் சம்பந்தமான பணிகள் நடைபெறும்.

தகவல்:
ஆலோசனை குழு 10
GPM மக்கள் நீதி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments