மக்கள் மேடை உறுப்பினர்கள் அனைவருக்கும் தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்.
மக்கள் மேடையின் ஆலோசனை கூட்டம் இன்று 07-06-2025 கடற்கரைப் பள்ளிவாசலில் நடைபெற்றது. மக்கள் மேடை தலைவர் பாவா மரைக்காயர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மக்கள் மேடை உறுப்பினர் கத்தார் சித்திக் அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 24 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையில் ஆண்டு சந்தாவை குறைத்து ரூ.3000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு அனைத்து உறுப்பினர்களும் முயற்சி செய்ய வேண்டும் என்றும், ஆண்டு சந்தாவை துரிதமாக செலுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- நமது வாட்டர் பிளான்ட் இருக்கும் இடத்தில் அவசர சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டுவது சம்பந்தமாக ஆலோசனை நடைபெற்றது அதன் அடிப்படையில் கட்டிடத்திற்கான நிதியை பங்குகள் மூலம் மக்கள் மேடை உறுப்பினர்களிடம் மட்டுமே பெறுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- மருத்துவமனை சம்பந்தமாக விரைவில் மக்கள் மேடை குழுமத்தில் கலந்தாய்வு நடைபெறும்.
- மருத்துவமனையைத் தொடர்ந்து இறகு பந்து விளையாட்டுக்கான உள் விளையாட்டரங்கம் கட்டுமானம் சம்பந்தமான பணிகள் நடைபெறும்.
தகவல்:
ஆலோசனை குழு 10
GPM மக்கள் நீதி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.