மணமேல்குடி ஒன்றியத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு முதல் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்கள் ஆகியோர் வழிகாட்டுதலின்படி
ஒன்றிய அளவிலான முதல் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியினை மணமேல்குடி வட்டார வளமையத்தில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திரு செழியன் அவர்களின் தலைமையில் தொடங்கியது.
மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்து வந்த பாதை குறித்தும் முதல் பருவத்திற்கான தொடரும் செயல்பாடுகளை குறித்து விளக்கம், முதல் பருவத்தில் புதிய செயல்பாடுகள் என்னென்ன கொடுக்கப்பட வேண்டும் என்ற விவரமும், ஒவ்வொரு மாணவர்களுக்கும் கொடுக்க வேண்டிய மதிப்பீடு தொடர்பான விளக்கமும்,
வகுப்பறையில் மாணவர்கள் சுயமாக செயல்பாடுகளை செய்து பார்ப்பதற்கும், தானே கற்றல் குறித்த விளக்கமும், எண்ணும் எழுத்தும் திட்டத்தினால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விளக்கமும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு சசிகுமார் திரு பன்னீர்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் திரு கனிவளவன் திரு செபஸ்தியான் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.