கோட்டைப்பட்டினத்தில் படகில் சென்ற போது கடலில் தவறி விழுந்து மீனவர் மரணம்




கோட்டைப்பட்டினத்தில் படகில் சென்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் இறந்தார்.

மீனவர் மரணம் 

கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் 143 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த அருளானந்தம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மலைச்சாமி (வயது 63), முருகன் (53), மற்றொரு முருகன் (40), குமார் (53) ஆகிய 4 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

கடற்கரையில் இருந்து சுமார் 15 நாட்டிகல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது மலைச்சாமி விசைப்படகில் இருந்து கால் தவறி கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரை சக மீனவர்கள் மீட்டு விசைப்படகிற்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மீனவரின் உடலை கரைக்கு கொண்டு வந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் போலீசார் மலைச்சாமி உடலை பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்து போன மீனவர் மலைச்சாமி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் கோட்டைப்பட்டினம் பகுதியில் தங்கியிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. விசைப் படகில் மீன்பிடிக்க ெசன்ற மீனவர் கடலில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments