புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 101-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணுவின் 101-வது பிறந்தநாள் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
கொடியேற்றம்:
ஆவுடையார்கோவில் தாலுகா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, ஒன்றிய செயலாளர் தோழர் பழனிகுமார் தலைமை வகித்து கட்சியின் செங்கொடியை ஏற்றி வைத்தார்.
வளர்ச்சி நிதி வசூல்
இதனைத் தொடர்ந்து, கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் 'கட்சி வளர்ச்சி நிதி' வசூலிக்கும் பணி நடைபெற்றது. ஆவுடையார்கோவில் மேல வீதி பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நிதி வசூலில் ஈடுபட்டனர்.
பங்கேற்பாளர்கள்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் எ.கணேசன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் அமிர்தம், இளங்கோவன், நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் ஜான் போஸ், கறம்பக்குடி கிளைச் செயலாளர் யூ. பாலசுப்பிரமணியம், மூத்த தோழர் பெத்தையா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கட்சியின் நூற்றாண்டு கடந்து 101-வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதையொட்டி, அப்பகுதி முழுவதும் கட்சித் தோழர்கள் உற்சாகத்துடன் விழாவைக் கொண்டாடினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.