மணமேல்குடி ஒன்றியம், வேட்டணிவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று (டிசம்பர் 12) மரம் நடு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் அய்யா அவர்கள் தலைமை வகித்து, முதல் மரக்கன்றினை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில், அறந்தாங்கி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் கலாராணி அவர்கள், புதுக்கோட்டை மாவட்ட உதவி திட்ட அலுவலர் செந்தில் ஐயா அவர்கள், பள்ளித் துணை ஆய்வாளர் இளையராஜா அவர்கள், வட்டார கல்வி அலுவலர் செழியன் அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும், மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் அவர்களும், இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெய் சங்கர் அவர்களும், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
விழாவில் பள்ளி வளாகத்தைச் பசுமையாக்கும் நோக்கில் பலவிதமான மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், விழாவில் பங்கேற்ற உள்ளூர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வானது, மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் மரம் வளர்ப்பதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு விழிப்புணர்வு நிகழ்வாக அமைந்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.