அறந்தாங்கி தொகுதியில் நிலவும் மின் தட்டுப்பாடு: புதிய துணை மின்நிலையம் அமைக்க எம்.எல்.ஏ. கோரிக்கை!



அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் குறைந்த மின் அழுத்தம் (Low Voltage) மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்தடைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணக் கோரி, அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் (S.T. Ramachandran, M.L.A.) அவர்கள் தமிழக அரசின் மின்சக்தி துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா இ.ஆ.ப. அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய கோரிக்கைகள்:

மின்சாரப் பிரச்சினைகளுக்கான காரணங்கள்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே ஒரு 230/110KV துணை மின்நிலையம் மட்டுமே உள்ளது. இதனால் அறந்தாங்கி போன்ற கடைநிலை பகுதிகளுக்கு மின்சாரம் சென்றடைவதில் சிக்கல் ஏற்படுகிறது.

குறிப்பாக 'பீக் ஹவர்ஸ்' (Peak Hours) நேரங்களில் குறைந்த மின் அழுத்தம் மற்றும் ஓவர் லோடு (Overload) காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைகள்:

ஆவுடையார்கோயில்: 
இங்குள்ள 33/11KV துணை மின்நிலையத்தை 110/11KV-ஆக தரம் உயர்த்த வேண்டும்.

காரக்கோட்டை: 
இப்பகுதியில் புதிய 110/11KV துணை மின்நிலையம் அமைப்பதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.

கொடிக்களம்: 
அதிக மின்பளு காரணமாக, இங்குள்ள துணை மின்நிலையத்திற்கு கூடுதலாக ஒரு மின்மாற்றி (1x10 MVA Transformer) அமைக்க வேண்டும்.

கடலோரப் பகுதிகள்: 
சேதமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்றி, கூடுதலாக புதிய மின் கம்பங்கள் மற்றும் உபகரணங்களை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும்.

இந்த நிதி ஆண்டிலேயே (2025-26) இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைந்து முடிப்பதன் மூலம் அறந்தாங்கி தொகுதி மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே சட்டமன்றப் பேரவையிலும் தான் கோரிக்கை வைத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments