புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நாளை (28.01.2026) விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை நடைபெறும் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், பிப்ரவரி 7-ம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் பணி நாளாகக் கொண்டு இயங்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடுமுறை அறிவிப்பானது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளுக்குப் பொருந்தாது என்றும், தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவசர அரசுப் பணிகளைக் கவனிக்கும் வகையில் மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்சப் பணியாளர்களுடன் நாளை செயல்படும் என்றும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.