திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை (ஜன. 28) உள்ளூர் விடுமுறை!



புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நாளை (28.01.2026) விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை நடைபெறும் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், பிப்ரவரி 7-ம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் பணி நாளாகக் கொண்டு இயங்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடுமுறை அறிவிப்பானது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளுக்குப் பொருந்தாது என்றும், தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவசர அரசுப் பணிகளைக் கவனிக்கும் வகையில் மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்சப் பணியாளர்களுடன் நாளை செயல்படும் என்றும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments