மணமேல்குடியில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரோந்து பணி
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே கடல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையில் போலீசார் நேற்று மணமேல்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
110 கிலோ கஞ்சா பறிமுதல்
அப்போது மணமேல்குடி அருகே அந்தோணியார் புரத்தில் உள்ள நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து இலங்கைக்கு 3 சாக்கு மூட்டைகளில் கஞ்சாவை கடத்த முயன்றதை கண்டறிந்தனர். இதையடுத்து கஞ்சாவை கடத்த முயன்ற மணமேல்குடி அந்தோணியார்புரம் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கிய ராகுல் (வயது 35), தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி தாலுகா காரங்குடா கிராமத்தை சேர்ந்த சிவசங்கர் (31) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 55 பொட்டலங்கள் கொண்ட 110 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணமேல்குடியில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.