கோபாலப்பட்டிணம் மீனவர் கவனத்திற்கு: விடுபட்டவர்கள் நிவாரண உதவித்தொகை பெற அழைப்பு!



மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித்தொகை பெறுவதில் விடுபட்ட மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் (2023, 2024, 2025) ஏதேனும் ஒரு ஆண்டு நிவாரண உதவித்தொகை பெற்று, தற்போது விடுபட்ட தகுதியுள்ள நபர்கள் தங்களை மீண்டும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பிக்க விரும்பும் மீனவர்கள் பின்வரும் ஆவணங்களின் நகல்களுடன் நேரில் வரவும்:
ஆதார் அட்டை
குடும்ப அட்டை (Ration Card)
வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம்

விண்ணப்பிக்கும் இடம் மற்றும் நேரம்:
இடம்: இ-சேவை மையம் (அவுலியா நகர் கட்டிடம்)
நேரம்: இன்று 22/01/2026 மாலை 2:30 முதல் 4:30 வரை மட்டும்

கூடுதல் விவரங்களுக்கு:
மேல் விபரங்கள் அறிய மற்றும் சந்தேகங்களுக்கு 6374463692 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

தகுதியுள்ள மீனவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உரிய காலத்திற்குள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments