மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்க மாதாந்திரக் கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட மீமிசல் பகுதியில் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வர்த்தகர்களின் நலன் மற்றும் சங்க நிர்வாகம் குறித்து ஆலோசிக்கப்பட்டு பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் விதமாக, இனி வரும் காலங்களில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தைக் கட்டாயம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம் வர்த்தகர்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டறிய வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
 
சங்கத்தின் நிதி நிலை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக, உறுப்பினர்கள் அனைவரும் தங்களது மாதாந்திர சந்தா தொகையைச் சரியாக ஒவ்வொரு மாதமும் 30-ஆம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், சங்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது. மீமிசல் பகுதியில் உள்ள புதிய வணிகர்கள் சங்கத்தில் இணைய விரும்பினால், சங்கத்தின் தலைவர், செயலாளர் அல்லது பொருளாளர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் மீமிசல் பகுதி வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments