பிரதம மந்திரி சூரிய ஒளி வீட்டு மின்சார திட்டத்தின் கீழ் மானிய விலையில் அனைத்து வீடுகளிலும் சூரிய மின் உற்பத்தி சோலார் தகடுகள் அமைத்து மின் கட்டணத்தை குறைத்திடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மின் பகிர்மானக் கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் சூரிய மின் உற்பத்தி சோலார் தகடுகள் அமைக்க விழிப்புணர்வு முகாம் வருகிற 6-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. முகாமில் மின் உற்பத்தி தகடுகள் அமைக்க தேவையானவர்களுக்கு முன்பதிவு செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியம் ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.30 ஆயிரமும், 2 கிலோ வாட்டிற்கு ரூ.60 ஆயிரமும், 2 கிலோ வாட்டிற்கு மேல் ரூ.78 ஆயிரமும் பெற்று பயனடையலாம்.
இந்த திட்டம் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த 15 நாட்களுக்குள் அரசு மானியம் பயன்பாட்டாளர் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் செய்த முதலீட்டை குறுகிய காலத்தில் திரும்ப பெறுவதுடன், மின்கட்டண சுமையில் இருந்து விடுபடவும், எதிர்காலத்தில் மின் கட்டண உயர்வில் இருந்து விடுபடவும், எளிய பராமரிப்பு மூலம் சுமார் 27 ஆண்டுகள் சூரிய தகடுகள் மின் உற்பத்தி செய்வதால் நீண்ட காலத்திற்கு பயனடையலாம். எனவே, விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு முன்பதிவு செய்து பிரதம மந்திரி சூரிய ஒளி வீட்டு மின்சார திட்டத்தின் கீழ் மானிய விலையில் சோலார் தகடுகள் நிறுவி நிரந்தரமாக பயனடையலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் பொன் ஜெயா மேரி தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.