மணமேல்குடி, மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மறுநாள் (மார்ச் 6) மின்தடை



புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கிராமிய உபகோட்டத்திற்கு உட்பட்ட கொடிக்குளம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (06.03.2026) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

​கொடிக்குளம் துணை மின் நிலையத்தில் கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றி (Transformer) அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால், மார்ச் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

இந்தத் துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் பெறும் மணமேல்குடி, மீமிசல், கோபாலப்பட்டிணம்,ஆர்.புதுப்பட்டிணம், அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், விச்சூர், பாலக்குடி, அரசநகரிப்பட்டினம், கொடிக்குளம், கரகத்திக்கோட்டை, அம்பலவாணேந்தல், பாக்கம், மூவனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும்.

பொதுத் தேர்வு மற்றும் பிற பகுதிகள்

தற்போது பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால், மாணவர்களின் நலன் கருதி மதிய நேரத்திற்குப் பிறகு இந்த மின்தடை திட்டமிடப்பட்டுள்ளது.

​அதே சமயம், நாகுடி, ஆவுடையார்கோயில், அமரடக்கி, வல்லவாரி, கட்டுமாவடி முதல் மும்பாலை மற்றும் மேலப்பட்டு வரையிலான பகுதிகளில் வழக்கம்போல் மின் விநியோகம் இருக்கும். அங்கு மின்தடை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

​எனவே, மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதி பொதுமக்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் இந்தத் தற்காலிக மின் நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு: மேற்கண்ட அறிவிப்பு தவிர்க்க முடியாத பட்சத்தில் கடைசி நேரம் மாறுதலுக்கு உட்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments