அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்!



தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், பெருநாவலூர் ஊராட்சிக்குட்பட்ட பரமந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 'புன்னகை அறக்கட்டளை' சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடுதல்

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.நல்லமுகமது தலைமை தாங்கினார். புன்னகை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஆ.சே.கலைபிரபு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஆவுடையார்கோவில் வனவர் ஜெயராஜ், மாணவ-மாணவிகளுக்குப் பல்வேறு வகையான மரக்கன்றுகளை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நெகிழி ஒழிப்பு உறுதிமொழி

நிகழ்ச்சியில் "மீண்டும் மஞ்சப்பை" திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. "வருங்காலத் தலைமுறைக்காகவும், இந்த மண்ணைக் காக்கவும் கடைகளுக்குச் செல்லும்போது துணிப்பைகளைப் பயன்படுத்துவோம்; நெகிழியைத் தவிர்ப்போம்" எனப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியர்கள் செல்வராஜ், சண்முகசுந்தரம், மேரிகொன்சிலியா, மனோன்மணி, பிரேமா மற்றும் புன்னகை அறக்கட்டளையின் பொதுக்குழு உறுப்பினர் (கமலகுடி) விக்னேஷ் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments