அறந்தாங்கியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்




அறந்தாங்கி பஸ் நிலையத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம், கோலப்போட்டி நடைபெற்றது. ஊர்வலத்தை அறந்தாங்கி தேர்தல் அதிகாரியும், வருவாய் கோட்டாட்சியருமான அபிநயா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊா்வலம் அறந்தாங்கி பஸ் நிலையத்தில் தொடங்கி பெரிய கடைவீதி, காந்தி பூங்கா சாலை, காமராஜர் சிலை வழியாக அறந்தாங்கி தாலுகா அலுவலகத்தில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான கவியரசு, தேர்தல் துணை தாசில்தார் சக்கர பாண்டியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி மேற்பார்வை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய்த்துறையினர், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments