தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தலும் வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது




தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15 ஆம் தேதி) அறிவித்தது. தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார்.

அதன்படி தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் படி இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும். வாக்குப்பதிவு என்னிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும்.

தொடர்ந்து, தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6. வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் 7. வேட்புமனு திரும்பப் பெற ஏப்ரல் 9 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.


தமிழ்நாட்டில் 4 லட்சம் வாக்காளர்கள் 85 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். மொத்தமாக 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல் முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் தற்போதை சட்டப்பேரவை ஆட்சிக் காலம் மே 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

  • மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு
  • அதிகபட்சமாக 1,200 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என ஏற்பாடு
  • வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்
  • வாக்காளர்கள் தங்களது செல்போன்களை பாதுகாத்து வைக்க ஏற்பாடு
  • வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள்
  • ECINET ஆப்-ல் வாக்காளர்கள் தங்களது விவரங்களை பெறலாம்
  • நியாயமான அமைதியான முறையில் தேர்தலை நடத்த முடிவு

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments