வெளிநாடு வாழ் ஜிபிஎம் பாசறைகள் சார்பில் 27-ஆம் இரவு ஸஹர் உணவு ஏற்பாடு!



புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை சார்பாக, ஆண்டுதோறும் ரமலான் மாதம் 27-வது இரவில் ஸஹர் உணவு வழங்கும் சேவை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், இன்ஷா அல்லாஹ் ரமலான் 27-வது இரவு ஸஹர் உணவு ஏற்பாடுகள் நமது ஊர் பெரிய பள்ளிவாசலில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளன.

சிங்கப்பூர் வாழ் இளைஞர்கள் பங்களிப்பு
இந்த ஆண்டிற்கான ஸஹர் உணவுக்கான முழுப் பொருளாதார உதவிகளையும், ஜிபிஎம் சிங்கப்பூர் வாழ் மண்ணின் மைந்தர்கள் மற்றும் சில ஆர்வமுள்ள இளைஞர்கள் இணைந்து வழங்கியுள்ளனர். அவர்களின் இந்த நற்பணி ஊர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த ஸஹர் உணவானது அதிகாலை 1:00 மணி முதல் 3:00 மணி வரை நடைபெறும். இந்தச் சிறப்பு ஏற்பாடு ஆண்களுக்கு மட்டும் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸஹர் உணவு நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஜிபிஎம் சொந்தங்கள் சமூக அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூர் வாழ் கோபாலப்பட்டிணம் இளைஞர்கள் சார்பில் அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments