2025-26 ஆம் கல்வியாண்டுக்கான 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகளில், மீமிசல் நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி ஒன்றிய அளவில் முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
தொடரும் சாதனைப் பயணம்
ஒவ்வொரு ஆண்டும் கல்வியில் சிறந்து விளங்கும் இப்பள்ளி, இந்தாண்டும் தனது பெருமையை நிலைநாட்டும் வகையில் நூறு சதவீத (100%) தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இப்பள்ளியில் பயின்ற மாணவி V. திவ்யதர்ஷினி 586 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக K. ஹாஜரா தில்ஷா 574 மதிப்பெண்களும், A. சித்தி ஆஷிகா 572 மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும், மாணவி R.தர்மரக்ஷினி 556 மதிப்பெண்களும், R.ஸ்ரீ ஹரினி 550 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். குறிப்பாக, கணக்குப் பதிவியல் பாடத்தில் மாணவி அ.சுகா 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
பாடவாரியான சிறப்புகள்
பள்ளி அளவில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 5 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 19 மாணவர்களும் பெற்றுள்ளனர். பாடவாரியாக 90-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களை தமிழில் 31 பேரும், ஆங்கிலத்தில் 09 பேரும், கணக்குப் பதிவியல் மற்றும் கணினி பயன்பாடுகளில் தலா 06 பேரும் பெற்று அசத்தியுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளையும், அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தரமான கல்வியைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் இப்பள்ளியில், தற்போது LKG முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.