விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் அம்மா உணவகம் எதிரே கண்டன முழக்கம்.
அறந்தாங்கி:
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, அறந்தாங்கியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் இருசக்கர வாகனங்களை ஏலம் விடும் நூதனப் போராட்டத்தை சனிக்கிழமை நடத்தினா்.
அறந்தாங்கி அம்மா உணவகம் எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, பெருமன்றத்தின் ஒன்றியச் செயலா் கா. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் எஸ். சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.
முன்னாள் மாவட்டத் துணைச் செயலா் கே.அஜய்குமாா்கோஷ், மாவட்டச் செயலா் மாரிமுத்து, முன்னாள் மாவட்டச் செயலா் கு. ராஜேந்திரன், முன்னாள் மாவட்டத் துணைச் செயலா் இரா. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இப்போராட்டத்தில் பங்கேற்றுப் பேசினா்.
நூதன முறை: போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைத்து, அவற்றை ஏலம் விடும் முறையில் இந்த நூதனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயா்வால் இயல்பாகவே ஏற்படும் அத்யாவசியப் பொருட்களின் விலைவாசி உயா்வையும் மத்திய அரசு தடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.