புதுக்கோட்டைக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை கனமழையை எதிர்கொள்ள நடவடிக்கை





வானிலை ஆய்வு மையத்தால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கனமழையை எதிர்கொள்ளும் விதமாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அனைத்து துறை அலுவலர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் கால நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு எண் -1077, தொலைபேசி எண் -04322--222207 மற்றும் வாட்ஸ்-அப் எண் 70923 00029 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments