அறந்தாங்கி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வருகிற புதன்கிழமை (ஜூலை 8) அன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறந்தாங்கி நகர் தமிழ்நாடு மின் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) பொறிஞர் கே. தனபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அறந்தாங்கி நகர் உபகோட்டத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அழியாநிலை (110/33-11 KV), அறந்தாங்கி (33/11 KV) மற்றும் மறமடக்கி (33/11 KV) ஆகிய துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மேற்கொள்ளப்படும் வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக, வருகின்ற 08.07.2026 (புதன்கிழமை) காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அறந்தாங்கி நகர் பகுதிகள் முழுவதும் மின் விநியோகம் இருக்காது.
மேலும், அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான அழியாநிலை, சிலட்டூர், சிதம்பரவிடுதி, குரும்பூர், ரெத்தினக்கோட்டை, ஆளப்பிறந்தான், இடையார், கம்மங்காடு, துரையரசபுரம், பஞ்சாத்தி, குண்டகவயல், மறமடக்கி, திருநாளூர், சிட்டங்காடு, கறம்பக்காடு மற்றும் சுனையக்காடு ஆகிய பகுதிகளிலும் இந்த மின்தடை அமலில் இருக்கும்.
எனவே, பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர்கள் இந்த மின்தடை நேரத்தைக் கருத்தில் கொண்டு, தங்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறும், மின்வாரியப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: தவிர்க்க முடியாத பட்சத்தில், இந்த மின்தடை அறிவிப்பில் கடைசி நேர மாறுதல்களுக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.