ஒக்கூர் ஊராட்சியில் பழுதடைந்த மின்கம்பங்களால் விபத்து அபாயம்: அச்சத்துடனே பயணிக்கும் பொதுமக்கள்!



ஒக்கூர் ஊராட்சிக்குட்பட்ட ஆவுடையார் கோவில் பிரதான சாலையில் உள்ள மின் கம்பங்கள் பலத்த சேதமடைந்து, சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து, உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.

இப்பகுதியில் இது போன்ற பல மின் கம்பங்கள் பழுதுடன் உள்ளதால், பலத்த காற்று வீசும் போதோ அல்லது மழைக்காலங்களிலோ இவை உடைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் இந்த சாலையைக் கடந்து செல்கின்றனர்.

பெரிய அளவில் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக, மின்சார வாரிய அதிகாரிகளும் ஊராட்சி நிர்வாகமும் தலையிட்டு, இந்த ஆபத்தான மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments