ஜூலை 10-ல் கோபாலப்பட்டிணம் சுன்னத்வல் ஜமாஅத் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்: பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு!



புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் சுன்னத்வல் ஜமாஅத் நிர்வாகம் குறித்து விவாதிக்க வரும் வெள்ளிக்கிழமை (10-07-2026) அன்று ஒரு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நமது ஊர் கோபாலப்பட்டிணம் சுன்னத்வல் ஜமாஅத் நிர்வாகம் தொடர்பாக, எதிர்வரும் வெள்ளிக்கிழமை 10-07-2026 அன்று ஜும்மா தொழுகைக்குப் பிறகு இந்தச் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
எனவே, கோபாலப்பட்டிணம் சுன்னத்வல் ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் எந்தவித தொய்வுமின்றி, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் ஜமாஅத்தின் எதிர்கால நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் ஊர் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments