மாஸ் காட்டிய பள்ளி மாணவர்கள்! விறுவிறுப்பாக நடைபெற்ற ஆவுடையார்கோவில் மண்டல சிலம்பப் போட்டி!



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் பாப்புலர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், ஆவுடையார் கோவில் மண்டல அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்பாட்ட போட்டி 2026-2027ஆம் கல்வியாண்டிற்காக சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டியினை பள்ளி தாளாளர் யூசுப் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மண்டல அளவிலான சிலம்பாட்ட மாஸ்டர்கள் சரவணன், ஹரி, திருமதி மலையரசி மற்றும் ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பீட்டர் உட்பட மண்டல அளவிலான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பலரும் கலந்து கொண்டு போட்டிகளை வழிநடத்தினர். 

இப்போட்டியில் வெற்றி பெற்று முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுகளுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொள்வதற்குத் தகுதி வாய்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments