மாஸ் காட்டிய பள்ளி மாணவர்கள்! விறுவிறுப்பாக நடைபெற்ற ஆவுடையார்கோவில் மண்டல சிலம்பப் போட்டி!



தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான குறுவட்ட/மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாநிலம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஆவுடையார்கோவில் மண்டல அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்பாட்டப் போட்டிகள் இன்று (திங்கள்கிழமை, 06-07-2026) மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

​இப்போட்டிகளில் ஆவுடையார்கோவில் மண்டலத்திற்குட்பட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது சிலம்பத் திறமைகளை வெளிப்படுத்தினர். ஒற்றைச் சுருள், இரட்டைச் சுருள், நெடும்பாடம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

​இன்றைய போட்டிகளுக்குச் சிலம்ப விளையாட்டுப் பொறுப்பாளர்களாக ஆவுடையார்கோவில் சிலம்ப மாஸ்டர் திரு. சரவணன், திரு. ஹரி மற்றும் திருமதி. மலையரசி ஆகியோர் கலந்துகொண்டு, நடுவர்களாகச் செயல்பட்டு போட்டிகளை மிகச் சரியான முறையில் வழிநடத்தினர்.


​போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பாராட்டுக்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு விளையாடிய வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments