புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேருந்து நிலையம் அருகே நள்ளிரவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒரு கடையில் பிடித்த தீ, மளமளவென அடுத்தடுத்த கடைகளுக்கும் வேகமாகப் பரவியதில் அங்கிருந்த 9 கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நள்ளிரவு நேரத்தில் இச்சம்பவம் நடந்ததால், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன.
அதிர்ஷ்டவசமாக இத்தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் மின் கசிவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நள்ளிரவு நேரத்தில் இச்சம்பவம் நடந்ததால், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன.
அதிர்ஷ்டவசமாக இத்தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் மின் கசிவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.