புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர்



கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் இன்னும் நிறைவடையாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளி,கல்லூரிகள் நிவாரண முகாம்களாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாலும், பல இடங்களில் போக்குவரத்து, மின் வசதியில்லாததாலும் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 


கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத அளவில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. மேலும் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் அதிகளவில் சாய்ந்துள்ளன. அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Post a Comment