நாளை முதல் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவசப் பயிற்சி...



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 2 முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நாளை ஞாயிற்றுக்கிழமை (டிச.16) முதல் தொடங்குகிறது.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், தன்னார்வப் பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்கம் இணைந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 2 முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி மற்றும் மாதிரித் தேர்வுகளை கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் நடத்த உள்ளது. போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம். 

மேலும் விவரங்களுக்கு 9786441417,9445955451 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மன்னர் கல்லூரி முதல்வர் சுகந்தி தெரிவித்துள்ளார்.

Post a Comment