மீமிசலில் நாளை (06/02/2019) காவல் துறை சார்பாக தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி



புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் 30-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தொடங்கி வைத்தார்.
அதன் ஒருபகுதியாக நாளை மீமிசல் காவல் துறை சார்பாக காலை 09.30 மணிக்கு  தலைக்கவசம் அனிந்து வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது.அது சமயம் ஊரில் உள்ள இளைஞர்கள் தலைக்கவசம் அனிந்து அந்த பேரணியில் கலந்து கொள்ளும்படி காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சாலை பாதுகாப்பு வார விழா வரும் 10 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், போக்குவரத்து விதிகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட உள்ளது.

மேலும் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல், போக்குவரத்து விதி மீறல்களைத் தடுத்தல், சாலைப் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய உறுதிமொழியினை எடுக்க செய்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Post a Comment