பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியின் மீது ஈர்ப்பினை ஏற்படுத்தும் வகையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவக் கண்காட்சி புதன்கிழமை (பிப். 27) தொடங்கி மார்ச் 8 வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
கண்காட்சியை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார். விழாவில், மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி, கல்லூரி முதல்வர் ஏ.எல். மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
கண்காட்சியில், மருத்துவக் கல்லூரியிலுள்ள 26 துறைகளின் மூலம் தனித்தனியே அரங்குகள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக அறுவை சிகிச்சை அரங்குகளும் அவற்றில் மேற்கொள்ளப்படும் அரிய அறுவைச் சிகிச்சைகளைப் பற்றிய விளக்கங்களும், மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதப்படுத்தப்பட்ட உடல்கள், சைக்கிள் ஓட்டும் எலும்புக்கூடு, நடனமாடும் எலும்புக் கூடு, நடனமாடும் பிரேதங்கள் உள்ளிட்ட மாதிரிகளும் வைக்கப்படவுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களும் கண்காட்சியைப் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நன்றி: தினமணி
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.