மணமேல்குடி கடற்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் மண்புழுக்களை பிடிக்கப்படுவதாக மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் வனத்துறை வன அலுவலர் ராஜசேகரன், வேட்டை தடுப்பு காவலர் முத்துராமன் உள்ளிட்டவர்கள் மணமேல்குடி கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்தப்பகுதியில் கடல் மண் புழுக்களை 3 பேர் பிடித்து கொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முருகன், மணி மற்றும் சிதம்பரத்தை சேர்ந்த முருகன் என தெரியவந்தது. அவர்களை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து 5 கிலோ கடல் மண்புழுக்களை பறிமுதல் செய்தனர்.
இந்த கடல் மண்புழு இறால் பண்ணைக்கு மருந்து தயாரிக்க பயன்படுகிறது. இது ஒரு கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது என அதிகாரிகள் கூறினார்கள். மேலும் தடைசெய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களை பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
நன்றி: தினத்தந்தி
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.