மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்குப் பதிலாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகளால் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்படும் வாராந்திர மக்கள் குறைகேட்பு, விவசாயிகள் குறைகேட்பு, அம்மா திட்ட முகாம், மனுநீதி நாள் உள்ளிட்ட அனைத்து குறைகேட்பு நிகழ்ச்சிகளும் ரத்த செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனுக்கள் பெட்டி ஒன்று வைக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக குறைகேட்புக் கூட்டங்கள் நடைபெறாது என்றும், பொதுமக்கள் இந்தப் பெட்டியில் தங்களது குறைகளை எழுதி போடலாம் என்றும் வாயிலில் எழுதி ஒட்டப்பட்டது.
திங்கள்கிழமை காலை ஆட்சியரகம் வந்த சிலர் தங்களது மனுக்களைப் பெட்டியில் போட்டனர். பலரும் இதனைக் கவனிக்காமல் மனுக்களைத் திரும்ப எடுத்துச் சென்றனர். பொதுமக்கள் தங்கள் குறைகளை எழுதி தாராளமாக பெட்டியில் போடலாம், தினமும் மனுக்கள் எடுத்து உரிய துறை அலுவலருக்குப் பிரித்து வழங்கப்படும் என்றும் ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.