ஜெகதாப்பட்டினம் அருகே கடற்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள பீடி சுருட்டும் இலை மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு ஒருசில மீனவர்களால் பீடி சுருட்டும் இலை, பீடி, சிகரெட், கஞ்சா போன்றவை கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல இலங்கையில் இருந்து தமிழக கடற்பகுதிக்கு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. கடத்தலை தடுக்க கடற்கரை போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார், சுங்கத்துறை, கடற்படை உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறையினர் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு, இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் பொருட்களை கடத்துவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது.
இந்நிலையில் ஜெகதாபட்டினம் அருகே உள்ள முத்தனேந்தல் கடற்கரையில் 10 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தன. அதுகுறித்து பொதுமக்கள் ஜெகதாபட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 10 மூட்டைகளிலும் பீடி சுருட்ட பயன்படுத்தப்படும் இலைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.3 லட்சமாகும். உடனே போலீசார் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பீடி சுருட்டும் இலைகளை கடத்தும்போது, போலீசார் கடலில் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டதால், போலீசாருக்கு பயந்து கடற்கரையில் மூட்டைகளை கடத்தல்காரர்கள் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த பீடி சுருட்டும் இலைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நன்றி: தினகரன்
நன்றி: தினகரன்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.