அமமுக-எஸ்.டி.பி.ஐ. கூட்டணி - மத்திய சென்னை SDPI கட்சி வேட்பாளர் தெஹ்லான் பாகவி வேட்புமனு தாக்கல்



பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான  (மார்ச்.26), அமமுக-எஸ்.டி.பி.ஐ. கூட்டணியின் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி அன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், மாநில பொருளாளர் வி.எம்.அபுதாஹிர், மாநில வர்த்தகர் அணி தலைவர் முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது பாரூக், காசிநாததுரை, ஏ.கே.அப்துல் கரீம், வழ.ராஜா முகமது, சுல்ஃபிகர் அலி, கூட்டணி கட்சித் தலைவர்கள், ஆதரவு அமைப்பின் தலைவர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், மாவட்ட மற்றும் பகுதி நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் தொண்டர்களுடன் பேரணியாக வந்த வேட்பாளர் தெஹ்லான் பாகவி, சென்னை செனாய் நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஸ்ரீதரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.


வேட்புமனு தாக்கலின் போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், அமமுக இளைஞர் பாசறை மாநில செயலாளர் கே.சி.விஜய், அமமுக தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சுகுமார்பாபு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன்,  SDPI கட்சி வழக்கறிஞர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கோபாலப்பட்டினம் நெய்னா முகம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook சமூக வலைதள பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்... 

Post a Comment

0 Comments