புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்ரல் 8-ஆம் தேதி (08/04/2019) உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு



நார்த்தாமலை அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி வரும் ஏப். 8ஆம் தேதி திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தைச் சேர்ந்த நார்த்தாமலை அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி வரும் ஏப். 8ஆம் தேதி திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அன்றைய நாளில் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் ஏப். 27ஆம்தேதி சனிக்கிழமை பணிநாளாக செயல்படும். சனிக்கிழமைகளில் செயல்படும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து அடுத்த நாள் ஏப். 28ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை பணிநாளாக செயல்படும்.

ஏப். 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளில் அரசுப் பொதுத்தேர்வுகள் மட்டும் விடுமுறையின்றி நடைபெறும். அதேபோல மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்படும்.

Post a Comment

0 Comments