நார்த்தாமலை அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி வரும் ஏப். 8ஆம் தேதி திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தைச் சேர்ந்த நார்த்தாமலை அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி வரும் ஏப். 8ஆம் தேதி திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அன்றைய நாளில் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் ஏப். 27ஆம்தேதி சனிக்கிழமை பணிநாளாக செயல்படும். சனிக்கிழமைகளில் செயல்படும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து அடுத்த நாள் ஏப். 28ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை பணிநாளாக செயல்படும்.
ஏப். 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளில் அரசுப் பொதுத்தேர்வுகள் மட்டும் விடுமுறையின்றி நடைபெறும். அதேபோல மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்படும்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.