பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அழகாபுரியைச் சேர்ந்தவர் சேதுராஜ் (60). இவருக்கு, மனைவி ஜோதிலட்சுமி, 3 மகன்கள் உள்ளனர். சேதுராஜ் கடந்த 12 ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக தமாம் நகரில் ஒரு வீட்டில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், 2018, டிசம்பர் 26 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்து விட்டாராம். குடும்பத்தினருடன் சேதுராஜுக்கு சுமூக உறவு இல்லாததால், அவரது இறப்பு விவரங்களைத் தெரிவிக்க இயலவில்லையாம்.
இதனால், சேதுராஜ் வேலை பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அங்குள்ள போலீஸுக்கு தகவல் தெரிவித்து, இந்திய தூதரகத்திடம் சேதுராஜ் உடலை ஒப்படைத்துவிட்டனராம்.
எஸ்டிபிஐ கட்சியின் சகோதர அமைப்பான இந்தியன் சோஷியம் போரம் எனும் அமைப்பை இந்திய தூதரகத்தினர் சில வாரங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டு, சேதுராஜ் குடும்பம் குறித்த விரங்களை விசாரித்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டனராம்.
எஸ்டிபிஐ கட்சியின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் 2 வாரத்துக்கு முன்பு, அழகாபுரியில் உள்ள சேதுராஜ் வீட்டை கண்டறிந்து தகவலை தெரிவித்தனர். ஏழ்மை நிலையில் உள்ள அவரது குடும்பத்தினர், சேதுராஜ் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவும்படி எஸ்டிபிஐ கட்சியினரைக் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து, எஸ்டிபிஐ கட்சியினர் ரூ. 60 ஆயிரம் செலவு செய்து, சேதுராஜ் உடலை விமானம் மூலம் வெள்ளிக்கிழமை காலை திருச்சிக்கும், பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் அழகாபுரி கிராமத்துக்கும் கொண்டு வந்தனர். அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, கிறிஸ்தவ முறைப்படி அங்குள்ள கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
2 மாத போராட்டத்துக்குப் பிறகு சேதுராஜ் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து அடக்கம் செய்யும் வரையிலான பணியில், எஸ்டிபிஐ கட்சியின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ரபீக், மாவட்டச் செயலர்கள் முஹம்மது பிலால், ஷாஜகான், மாவட்டப் பொதுச் செயலர் அப்துல்கனி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது இக்பால், லப்பைக்குடிகாடு நகரத் தலைவர் அஸ்கர் அலி ஆகியோர் ஈடுபட்டனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.