சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் புதன்கிழமை மாலை அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
பியு. சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டச் செயலர் அருண்மொழி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ் கவிவர்மன், தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் நியாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கலைமுரசு உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர். ஸ்டெரிலைட் ஆலை விவகாரம் உள்பட பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களில் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வந்த முகிலன் கடந்த சில நாட்களாகக் காணவில்லை. மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்டு வந்த செயற்பாட்டாளரைக் கண்டுபிடிக்க வேண்டியதும், அவருக்குப் பாதுகாப்பு வழங்குவதும் அரசின் பொறுப்பு என ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.