உள்ளூர் பாரம்பரிய மீன்களின் மரபியலைக் கெடுக்கும் தன்மை கொண்ட ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை, மீன் வளர்க்கும் விவசாயிகள் கொள்முதல் செய்ய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் பாரம்பரிய மீன் ரகங்களாக இந்தியப் பெருங்கெண்டை வகையில் கட்லா, ரோகு, மிர்கால், சீனப்பெருங்கெண்டை ரகங்களான வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை, சாதா கெண்டை உள்ளிட்ட ரகங்கள் வளர்கின்றன. இவற்றுடன் மரபியல் மேம்படுத்தப்பட்ட திலேப்பியா, கொடுவா ஆகிய மீன் ரகங்கள் அரசின் மீன் வளத்துறை சார்பில் வளர்ப்புக்கென வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், ஆப்பிரிக்க ரக கெண்டை மீன்கள் தற்போது புழக்கத்தில் வந்திருக்கின்றன. இந்த ரக மீன்கள் வளர்ப்புக்கும் விற்பனைக்கும் தடை செய்யப்பட்டவை.
இவை நீர்நிலைகளில் உள்ள நீர் வாழ் உயிரினங்களை, நம்முடைய பாரம்பரிய மீன்களை, முட்டைகளை அதிகளவு உணவாக எடுத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அதேபோல, உள்ளூர் பாரம்பரிய மீன்களுடன் கலந்து இனப்பெருக்கம் செய்தால் மரபியல் மாற்றம் ஏற்பட்டுவிடவும் வாய்ப்புள்ளது.
இதனால் மீன் வளர்க்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டம் விவசாயத்தில் குறிப்பாக மீன் வளர்ப்பிலும் அதிக ஈடுபாடு கொண்ட மாவட்டமாகும்.
எனவே, அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வாங்கி வளர்க்க வேண்டாம், கொள்முதல் செய்ய வேண்டாம். பொதுமக்கள் வாங்கி உண்ணவும் வேண்டாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.