திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள செல்லக்குட்டி என்ற ஊரை சேர்ந்த மகாலிங்கம், ஆறுமுகம், செல்வம், ராஜசேகர், ராஜேஷ், காளியப்பன், சுந்தரம், செந்தில்குமார் மற்றும் 4 பெண்கள் அடங்கிய ஒரு குழுவினர் அறந்தாங்கியை அடுத்த ஆவணத்தான்கோட்டை கடைவீதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று குறி சொல்லி வந்தனர்.
இந்நிலையில் மாங்குடி கிராமத்திற்கு 8 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் சென்று, அங்குள்ள பொது மக்களிடம் குறி சொல்லினர்.
பின்னர் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை ஏமாற்றி பணம், மோதிரம், செல்போன் போன்றவற்றை வாங்கிக் கொண்டு, ஆவணத்தான் கோட்டைக்கு சென்று விட்டனர்.
இதைத் தொடர்ந்து பணம், நகை, செல்போன் போன்றவற்றை குறிசொல்பவர்கள் பறித்துச் சென்றதை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள்ஆவணத்தான்கோட்டைக்கு சென்று, பணம், நகை,செல்போன்களை பறித்துச் சென்றவர்களை பிடித்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து பணம், நகை, செல்போன் மீட்கபட்டது.
இது குறித்துஅறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.