உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு சவரியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆலங்குடி தாலுகா கே.ராசியமங்களத்தை சேர்ந்தவர் மெய்கேல்ஜோசப் (வயது 50). கூலி தொழிலாளியான, இவர் குவைத் நாட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சவரியம்மாள் என்ற மனைவியும், மரியதீபா, பிரின்ஸ்மி என்று 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று சவரியம்மாளுக்கு குவைத் நாட்டில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், மெய்கேல்ஜோசப் மர்மமான முறையில் இறந்து விட்டதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சவரியம்மாள் கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து மெய்கேல்ஜோசப் உடலை எப்படி சொந்த ஊருக்கு கொண்டு வருவது என்று அவரது உறவினர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இதையடுத்து மெய்கேல்ஜோசப் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு சவரியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.