இந்தியாவிலேயே முதன்முறையாக ஏ.டி.எம் மையத்தில் டெபிட் கார்டு இல்லாமலே பணம் எடுக்கும் அம்சத்தை எஸ்.பி.ஐ அறிமுகம் செய்துள்ளது.
பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ (பாரத் ஸ்டேட் வங்கி), கடந்த 2017 -ம் ஆண்டு யோனோ (Yono App) என்ற டிஜிட்டல் பேங்கிங் சேவையை அறிமுகம்செய்தது. இந்த செயலிமூலம் எஸ்.பி.ஐ பயனர்கள் டெபிட் கார்டு இல்லாமலே பணம் எடுக்க முடியும்.
பயனர்கள், முதலில் யோனோ கேஷ் (Yono Cash ) மொபைல் அப்ளிகேஷனை டவுண்லோடு செய்ய வேண்டும். பின்னர், 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும். இதனையடுத்து, பதிவுசெய்த மொபைல் நம்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி உறுதிசெய்யப்படும். உறுதிசெய்யப்பட்டதும், ஏ.டி.எம்-களில் யோனோ கேஷ் செயலியின் எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவுசெய்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ரூ.10,000 வரை மட்டுமே இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எடுக்க முடியும் என்று எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. இந்த பரிவர்த்தனைக்கு ஏ.டி.எம் கார்டு தேவைப்படாது.
தற்போதைக்கு, இந்த சேவையை டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்க உள்ளதாகவும், அதன் மீதான வரவேற்ப்பை பார்த்துவிட்டு, க்ரெடிட் கார்டுகளுக்கும் இதை விரிவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.இந்தச் சேவை இப்போதைக்கு இந்தியாவில் உள்ள 16,500 ஏ.டி.எம் மையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது YONO-வை 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோக, SBI Anywhere என்ற ஆப்பை ஒரு கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இரண்டு ஆப்களையும் விரைவில் ஒருங்கிணைக்க உள்ளதாக எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.