சவுதி செந்தமிழர் பேரவை தம்மாம் மண்டலம் சார்பில் விவசாயி சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்



சவுதி செந்தமிழர் பேரவை முன்னெடுத்த போன் போடுங்க. வீட்டுக்கு   ஒட்ட. போடுங்க. நாட்டுக்கு   நமது சின்னம் விவசாயி என்ற பதாகையோடு  தமிழர்கள் அதிகம்  இருக்கும்  குடியிருப்புக்கு நேரில் சென்று  துண்டு சீட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில்  நாம் தமிழர் கட்சி உறவுகள் ஈடுபட்டனர்.

இதில் கப்ஜி மண்டலத்தில்  பொறுப்பாளர்  மன்னை அன்பு  அவர்கள்  முன்னெடுப்பிலும், தமாம் மண்டலத்தில் பொறுப்பாளர்கள் சரவணன் ஐயா கோவை இராஜி ஜெயின், கந்தவேல் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சேக் முகம்மது மற்றும் முகமது நூருல்லா களப்பணியிலும்,





சீயாத் மண்டலத்தில் சூசை சில்வர் ஸ்டார்  செயல்பாட்டிலும், கத்திப்  மண்டலத்தில் சிவராமன் திருப்பதி செயல்பாட்டிலும் வாக்கு சேகரிப்பு  காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை மிக சிறப்பாக நடந்தது.

நிகழ்ச்சியின் நிறைவாக தமுமுக  நடத்திய இஸ்லாம் ஒரு இனிய  மார்க்கம்  என்ற. நிகழ்ச்சியிலும்  கலந்து கொண்டு  நமது கருத்துகளை எடுத்துரைத்தும்  வாக்கு  சேகரித்தும்  நிகழ்ச்சி  நிறைவு பெற்றது.

இந் நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட. உறவுகளுக்கும்  சிறப்பான முறையில்  துன்டு பிரசுரம் வடிவமைத்த கந்தவேல், நூருல்லாவுக்கும் அதை அழகிய பதிவாக அச்சிட்டு தந்த சதீஸ் அவரது  நண்பருக்கும்  சவுதி செந்தமிழர் பேரவையின் புரட்சி வாழ்த்துக்கள்.

இலக்கு ஒன்று தான்  இனத்தின்  விடுதலை

தகவல்: முகம்மது நூருல்லாஹ் 

Post a Comment

0 Comments