புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகே அய்யம்பட்டினம், செல்லனேந்தல் ஆகிய கிராமங்கள் உள்ளன.
இங்கு 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு ஊராட்சி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பல மாதங்களாக இப்பகுதிக்கு குடிநீர் சரிவர வினியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீர் ரூ.10 விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். இதனால் இப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுநாள் வரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெகதாப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தினர் இங்கு வந்தால் தான் மறியலை கைவிடுவோம் என்று தெரிவித்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை.
இதையடுத்து போலீசார், பொதுமக்களிடம் நாங்கள் அதிகாரிகளிடம் பேசி உங்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து தருகிறோம் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வழங்காததை கண்டித்து அய்யம்பட்டினம், செல்லனேந்தல் கிராம மக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி பதாகை வைத்துள்ளனர். மேலும் சில வீடுகளில் கருப்பு கொடியும் கட்டி உள்ளனர்.
இங்கு 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு ஊராட்சி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பல மாதங்களாக இப்பகுதிக்கு குடிநீர் சரிவர வினியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீர் ரூ.10 விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். இதனால் இப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுநாள் வரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெகதாப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தினர் இங்கு வந்தால் தான் மறியலை கைவிடுவோம் என்று தெரிவித்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை.
இதையடுத்து போலீசார், பொதுமக்களிடம் நாங்கள் அதிகாரிகளிடம் பேசி உங்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து தருகிறோம் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வழங்காததை கண்டித்து அய்யம்பட்டினம், செல்லனேந்தல் கிராம மக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி பதாகை வைத்துள்ளனர். மேலும் சில வீடுகளில் கருப்பு கொடியும் கட்டி உள்ளனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.